புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ஈரம் தொடங்கி பல படங்களை இயக்கிய அறிவழகனுக்கு கமர்ஷியல் வெற்றியைக் கொடுத்த படம் - 'குற்றம்-23'. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறார் அறிவழகன்! ஆனால் இந்த முறை கதாநாயகனை மையப்படுத்தி எடுக்காமல், கதாநாயகியை மையப்படுத்தி பரபரப்பான த்ரில்லர் கதையை இயக்க முடிவு செய்துள்ளாராம்.
இந்த படத்தை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் இயக்க திட்டமிட்டுள்ளார் அறிவழகன். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படம் என்பதால் நயன்தாராவை வைத்து இயக்கலாமா என பரிசீலித்த அறிவழகன், கடைசியில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாராம்.
நயன்தாரா 4 கோடி சம்பளம் கேட்கிறார். தவிர அவர் நடித்த டோரா, திருநாள், காஷ்மோரா என வரிசையாக தோல்வியடைந்து வருகின்றன. எனவே நயன்தாராவுக்கு பதில் மலையாளத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.
இப்போது இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இயங்கி வரும் அறிவழகன், வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்கும் திட்டத்தில் உள்ளார்!