மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
மலையாள திரையுலகில் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது தான் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம். நடிகர்கள் பிருத்விராஜ், ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் இவர்களது நண்பரான ஷாஜி நடேசன் ஆகியோர் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள். இதில் ஆர்யா இந்த நிறுவனம் ஆரம்பித்தபின் தானும் ஒரு பங்குதாரராக சேர்ந்துகொண்டவர். உறுமி படம் தான் இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. கடைசியாக சில மாதங்களுக்கு முன் வெளியான மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்தது
இந்தநிலையில் இதன் பங்குதாரர்களில் முக்கியமானவராக கருதப்படும் பிருத்விராஜ் இந்த நிறுவனத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார். இதற்காக பங்குதாரர்களுக்குள் எந்த மனக்கசப்பும் உருவாகிவிட்டதோ என நினைத்துவிட வேண்டாம்.
இதுபற்றி பிருத்விராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த ஆறு வருடங்களில் இந்த நிறுவனத்தில் நானும் ஒரு பாகமாக இருந்ததில், பெருமைப்படும் படங்களை கொடுத்ததில் மகிழ்ச்சி. தற்போது புதிய இலக்கை நோக்கி நான் நகரவேண்டிய சரியான தருணம் இதுதான் என நினைக்கிறேன்.. அதனால் இந்த நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்.. அதேசமயம் இந்த நிறுவனத்தின் நலம் விரும்பியாக எப்போதும் இருப்பேன்.. ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் ஆகியோர் இந்த நிறுவனத்தை இதேபோல தொடர்ந்து சிறப்பாக வழிநடத்த எனது வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார் பிருத்விராஜ்.