சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணி இணைந்துள்ள படம் ஸ்பைடர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் ரூ. 110 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. ராகுல்பிரித்சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வசன காட்சிகள் அனைத்து படமாக்கப்பட்டு விட்ட நிலையில், ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தற்போது இரண்டு பாடல் காட்சிகள் இறுதிக்கட்டமாக படமாக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து டப்பிங் பணிகள் தொடங்குகிறது. இந்த படத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே தனது ரோலுக்கு தானே டப்பிங் பேசப்போகிறாராம் மகேஷ்பாபு. மேலும், தற்போது மகேஷ்பாபு, ஆந்திராவில் வசித்தபோதும், அவர் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தான் படித்தார். அதனால் சுத்தமாக தமிழ் பேசுவதில் அவருக்கு எந்த கஷ்டமும் இல்லை என்பதால், தமிழ் பதிப்பிற்கும் தானே டப்பிங் பேசுவதாக டைரக்டர் முருகதாசிடம் கூறியிருக்கிறாராம் மகேஷ்பாபு.