இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
1948ம் ஆண்டு வெளிவந்த படம் மோகினி. ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர் டி.எஸ்.பாலையா. அப்போது குணசித்ரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்த டி.எஸ்.பாலையாவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.
இரண்டாவது நாயகனாக எம்.ஜி.ஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் அப்போது வளர்ந்து வரும் நடிகர். மோகினியில் தான் ஹீரோவாக நடித்தால் தன் எதிர்காலத்துக்கு நல்லதாக அமையும் என்று எம்.ஜி.ஆர்., நினைத்தார். அவர் ஜூபிடர் பிலிம் அதிபர் எம்.சோமசுந்தரத்தை அணுகி தன்னை ஹீரோவாக போடும்படி கேட்டார் அதற்கு அவர் "பாலையாவை முடிவு செய்துவிட்டோம். அவர் சம்மதித்தால் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்" என்றார்.
அன்றே டி.எஸ்.பாலையாவை சந்தித்த எம்.ஜி.ஆர்., தன் ஆசையை கூறினார். "நான் இதில் ஹீரோவாக நடித்தாலும் அடுத்து என்னை வில்லனுக்குத்தான் கூப்பிடுவார்கள். நீ வளர வேண்டிய பையன் நீயே ஹீரோவாக நடித்துக் கொள்" என்று கூறி பாலையா இரண்டாவது நாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக மாதுரி தேவி நடித்தார். எம்.ஜி.ஆர் ஜோடியாக வி.என்.ஜானகி நடித்தார். லங்கா சத்யம் இயக்கிய இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. தனக்கு டி.எஸ்.பாலய்யா செய்த உதவிக்காக பல கட்டங்களில் எம்.ஜி.ஆர், அவருக்கு உதவி செய்து வந்தார்.