பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கன்னடத்தில் வெளியான யூ டேர்ன் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் காற்று வெளியிடை படத்தில் இவரது காட்சிகள் கத்தரிக்கு பலியானாதாலும் படம் தோல்வி அடைந்ததாலும் எந்த பயனும் இல்லை. தற்போது அவர் இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்துவிட்டார். அடுத்து விக்ரம் வேதா, ரிச்சி படங்களில் நடித்து வருகிறார். அடிப்படையில் நாடக நடிகையான ஸ்ரத்தா இப்போது நாடகத்திற்கு முழுக்கு போட்டுவிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:
நான் கட்டுப்பாடான ராணுவ குடும்பத்திலிருந்து வந்தவள். ராணுவத்தில் நான் டாக்டராக பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் குடும்பத்தின் விருப்பமாக இருந்தது. ஆனால் எனக்கு நடிப்பின் மீதுதான் கவனம் இருந்தது. இதனால் நடிப்பு பயிற்சி பெற்று ஆங்கில நாடகங்களில் நடித்து வந்தேன். அந்த நாடகத்தை பார்த்துதான் மலையாள பட வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே யூடேர்ன் வாய்ப்பு வந்தது இப்போது தமிழுக்கும் வந்துவிட்டேன்.
நாடகம்தான் என் வாழ்க்கை என்றிருந்தேன். சினிமாவுக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அது நடந்து விட்டது. அதிலும் தமிழில் விஜய்சேதுபதி, மாதவன் மாதிரியா ஹீரோக்களுடன் நடிப்பேன் என்பதை கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. இப்போது நாடகத்தில் நடிக்க ஆசை இருந்தாலும் நேரம் இல்லை. எனது நாடக நண்பர்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். நாடகத்தில் பெற்ற பயிற்சிதான் சினிமாவுக்கு உதவுகிறது என்பதை எப்போதும் மறக்க மாட்டேன் என்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.