பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை நெருங்கி உள்ளது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் நடிகர் திலீப் என்றும் அதை செயல்படுத்தியதுதான் பல்சர் சுனில் கூட்டாளிகளும் என்கிற கோணத்தில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கொச்சியில் செயல்பட்டு வரும் நடிகை காவ்யா மாதவனின் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்டுள்ள பல்சுனில் நண்பன் ஜின்சன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் காவ்யா மாதவனும் சிக்குவார் என்று தெரிகிறது. நடிகர் திலீப் காவ்யா மாதவனுடன் நெருங்கி பழகுவதை அவரது மனைவி மஞ்சுவாரியாரிடம் சொல்லி அவர்கள் பிரிவுக்கு பாவனாக காரணமாக இருந்தார் என்று கூறப்படுவதுண்டு. பாவனாவின் கடத்தல் வழக்கு அடுத்தடுத்த பரபரப்புக்கு தாவிக்கொண்டே இருக்கிறது.