தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் 'கொட்டாரத்தில் குட்டி பூதம்', 'முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் , பி.ஓ ஆகிய படங்களை இயக்கியுள்ளவர் குமார் நந்தா. அகதி' எனும் தமிழ் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக 'சூறாவளி' என்கிற படத்தை இயக்கவுள்ளார் . கோல்டன் விங்ஸ் நிறுவனம் சார்பாக ஷ்யாம் மோகன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு சஜி ஒளிப்பதிவு செய்கிறார், ராம் இசையமைக்கிறார்.
தொட்டால் தொடரும், சேது பூமி படங்களில் நடித்த தமன் குமார் , கேரளா நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி படங்களில் நடித்த அபி சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, மனிஷாஜித் கதாநாயகியாக நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் குமார் நந்தா கூறியதாவது:
ஒரு பக்கம் கஞ்சா விற்கும் கும்பல். இன்னொரு பக்கமோ அவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய போலீஸாரும் போட்டிக்கு கஞ்சா விற்கின்றனர். இவர்களுக்குள் ஏற்படும் தொழில் போட்டியும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்தப்படம் விவரிக்கிறது.. கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வரும் ஜூலை 10 முதல் சுமார் 15 நாட்கள் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தவுள்ளோம். என்றார்.