‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கொம்பன் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து வரும் படம் கொடிவீரன். வழக்கம்போல் கிராமத்து கதையில் தயாராகி வரும் இந்த படத்தில் நாயகியாக சாட்டை, குற்றம் 23 படங்களில் நடித்த மகிமா நம்பியார் நாயகியாக நடிக்க, ரேணிகுண்டா சனுஜா தங்கை வேடத்தில் நடிக்கிறார். காதல், செண்டி மென்ட், ஆக்சன் கலந்த கதையில் இந்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். சமீபகாலமாக கதாநாயகி என்கிற ட்ராக்கில் இருந்து விலகி முக்கியத்துவம் வாய்ந்த மாறுபட்ட கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ள பூர்ணா, சவரக்கத்தி படத்தில் டைரக்டர் ராமின் மனைவியாக இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பவர், இந்த கொடிவீரன் படத்தில் ஒரு அழுத்தமான ரோலில் நடிக்கிறார். முக்கியமாக, இந்த படத்துக்காக ஒரு காட்சியில் நிஜமாலுமே அவருக்கு மொட்டை அடிக்கப்படுகிறதாம். அந்த அளவுக்கு எந்த கதாநாயகிகளும் செய்யத்துணியாத வகையில், இந்த படத்திற்காக தனது தலைமுடியை தியாகம் செய்கிறார் பூர்ணா.
இதுகுறித்து அவரிடம் சொன்னபோது எந்த அதிர்ச்சியையும் காட்டாமல், கதைக்கு அவசியம் என்றால் அப்படி நடிப்பதில் தவறில்லை. கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொன்னாராம் பூர்ணா. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், கொடிவீரன் படத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்கிறார் பூர்ணா.