ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
போகன் படத்திற்கு பிறகு ஹன்சிகாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டது. அதனால் மலையாளத்தில் மோகன்லாலின் வில்லன் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க கமிட்டான ஹன்சிகா, தெலுங்கிலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி தன்னை தக்க வைத்துக்கொண்டார். அதோடு தமிழில் கொடிவீரன் படத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் அவர்கள் சொன்ன சம்பளம் மிகக்குறைவாக இருந்ததால் கடைசி நேரத்தில் விலகினார் ஹன்சிகா.
அந்த நேரத்தில், ஹன்சிகாவைத் தேடி விஷ்ணு உள்ளிட்ட சில வளர்ந்து வரும் ஹீரோக்களின் படவாய்ப்புகள் சென்றிருக்கிறது. அந்த படங்களில் தான் எதிர்பார்த்த சம்பளம் தருவதற்கு தயாரிப்பாளர்கள் முன்வந்தபோதும், ரொம்ப இறங்கிச்சென்றால் அடுத்தபடியாக முன்னணி நடிகர்களின் படங்களையே மறந்து விட வேண்டியதான் என்பதால் அந்த வாய்ப்புகளை தட்டிக்கழித்து வந்திருக்கிறார் ஹன்சிகா.
இந்த நிலையில்தான் தற்போது அவருக்கு பிரபுதேவாவுடன் குலேபகாவலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால், மறுபடியும் விட்ட மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஹன்சிகா, சுந்தர்.சியின் சங்கமித்ரா படத்தில் எப்படியேனும் இடம்பிடித்து விட வேண்டும் என்பதற்கான முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
ஸ்ருதிஹாசன் அந்த படத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து நயன்தாரா, அனுஷ்கா என முன்னணி நடிகைகள் யாரும் 2 வருடங்களுக்கு கால்சீட் கொடுத்து நடிக்க முன்வராததால், ஹன்சிகாவின் முயற்சிகள் ஒர்க்அவுட்டாகும் சூழ்நிலை நிலவிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.