தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"நடித்தால் ஹீரோ... அதுவரை நான் வெயிட் பண்றேன்..." என்ற ஒற்றை டயலாக் மூலம் பிரபலமானவர் "காதல்" பட புகழ் "விருச்சிககாந்த்" எனும் பல்லு பாபு. அதன்பின் விஜய்யின் "வேட்டைக்காரன்" உள்ளிட்ட ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவரது பெற்றோரும் இறந்துவிட்டனர். பட வாய்ப்பு இல்லாமலும், வாழ வழியின்றியும் இருந்தார்.
சென்னை, சூளை அங்காளம்மன் கோயில் அருகில் உள்ள நடைபாதையில் வசித்து வந்தார். அங்குள்ள கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை உணவாக உண்டு வந்ததுடன் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். இவரின் நிலையை பார்த்த பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா மற்றும் இயக்குநர் மோகன் ஆகியோர் பாபுவை மீட்டு கொண்டு வந்துள்ளனர். தற்காலிகமாக பாபுவிற்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார் சாய் தீனா.
இதுகுறித்து சாய் தீனாவும், மோகனும் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "பாபுவிற்கு மனநலம் எல்லாம் பாதிக்கவில்லை. மன அழுத்தம் தான் உள்ளது. தற்போது அவருக்கு நல்ல நண்பர்கள், நல்ல சாப்பாடு, தூக்கம் தான் தேவைப்படுகிறது. பாபுவிற்கு இயக்குநர்கள், நடிகர்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும். அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும்" என இருவரும் கூறுகிறார்கள்.