'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜேஎஸ்கே., பிலிம்ஸ் சார்பில் சதீஷ் ஏராளமான படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்தவர் சதீஷ். இவரது தயாரிப்பில் இப்போது தரமணி, அண்டாவ காணோம் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளன.
இதுகுறித்து சதீஷ் கூறியதாவது, "நான் சினிமா தயாரிக்க வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. 10 சிறந்த இயக்குநர்களை எங்கள் நிறுவனம் மூலம் அடையாளபடுத்தி உள்ளேன். தேசிய விருதும் பெற்றுள்ளோம். சினிமாவில் பல விஷயங்களை சமீபத்தில் அதிகம் கற்றுக் கொண்டேன். எத்தனை தடங்கல்கள் இடையூறுகள் வந்தாலும் சினிமா மீது உள்ள காதல், நேர்மை, ரசனை இருந்தால் மட்டுமே இந்த துறையில் நிற்க முடியும்.
தொடர்ந்து எங்கள் நிறுவனத்தின் மூலம் சிறந்த படங்களை தயாரித்து வெளியிட உள்ளோம். பல கதைகள் வருகிறது. கண்டிப்பாக வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் எடுக்கும் முயற்சியில் உள்ளேன். மிகவும் எதிர்பார்க்கபடும் தரமணி படம் ஆகஸ்ட் 11 ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம். படம் கண்டிப்பாக மிகப்பெரும் வெற்றியை பெற்று தரும் என்கிறார் சதீஷ்.