ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் காமெடி ரோல்களில் நடித்தவர் தாடி பாலாஜி. தற்போது டிவி., நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். சமீபகாலமாக பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், ஜாதி ரீதியாக சொல்லி திட்டுவதாகவும் பாலாஜி மீது ஏற்கனவே புகார் கொடுத்தார் நித்யா. ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று(ஜூலை 1) மீண்டும் தன் கணவர் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடத்தில் புகார் கொடுத்துள்ளார் நித்யா.
இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நித்யா... "என் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார். கடந்த மே மாதம் அவர் அடித்ததில் எனக்கு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றேன். அவருக்கும், எனக்கு கிட்டத்தட்ட 15வயது வித்தியாசம். ஏற்கனவே அவருக்கு ஒரு திருமணம் நடந்து குழந்தையும் உள்ளது. ஆனால் இந்த விஷயம் திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு தெரியும்.
முதல்மனைவி விட்டு சென்றது போன்று நானும் விட்டு சென்று விடுவேனோ என்கிற பயம் அவரிடம் உள்ளது. நான் முன்பு இரண்டு, மூன்று நிறுவனங்களில் வேலை பார்த்தேன். அங்கு வந்தும் பிரச்னை செய்தார். இதனால் வேலைக்கு போவதை நிறுத்திவிட்டேன். பலபேருடன் தொடர்பு படுத்தி பேசி தினம் சித்ரவதை செய்கிறார்".
இவ்வாறு அவர் கூறினார்.