மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, நடிப்பில் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் மாநகரம். வசூல் ரீதியாக பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
மாநகரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தீரன் அதிகாரம் ஒன்று படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் கார்த்தி, அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் சார்பில் மறுத்துள்ளனர். அதாவது, திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக இருப்பதால், கார்த்தி நடிப்பது இன்னும் முடிவாகவில்லையாம். திரைக்கதை முடிவானவுடன் ஹீரோ என்பதை நாங்கள்தான் முடிவு செய்வேம் என்று தெரிவித்துள்ளனர்.
மௌனகுரு படத்தின் இயக்குநர் சாந்தகுமாரை பல வருடம் உட்கார வைத்ததால் கடைசியில் வெறுத்துப்போய் வெளியேறினார். அவருக்கு ஏற்பட்ட நிலைமை லோகேஷ் கனகராஜுக்கு வராமல் இருக்கணும் என்று கமெண்ட் அடிக்கின்றனர் சக தயாரிப்பாளர்கள்.