புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
நாடு முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி., நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதில் பலர் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சினிமா துறையில் இருப்பவர்கள் ஜிஎஸ்டி.,க்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஜிஎஸ்டி.,யோடு மாநில அரசின் நகராட்சி வரி 30 சதவீதமும் சேர்ந்து வசூலிக்கப்பட இருப்பதால் சினிமா முற்றிலும் பாதிக்கப்படும் என திரைத்துறையினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக திங்கள் முதல் தியேட்டர்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகரும், இயக்குநர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜிஎஸ்டிக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவன் நான் தான். சினிமா துறையினர் ஒட்டுமொத்தமாக இணைந்து போராட வேண்டும் என்று நான் ஆரம்பத்திலேயே கூறினேன். ஆனால் இப்போது காலம் தாழ்த்தி தமிழ் சினிமாவினர் போராடுவது ஏன்?.
ஜிஎஸ்டிக்கு குரல் கொடுத்த கமலுக்கு பாராட்டுகள். ஆனால் ரஜினி ஏன் இதைப்பற்றி பேச மறுக்கிறார். உங்களை வாழவைத்த திரையுலகத்துக்கு ஏன் குரல்கொடுக்கவில்லை?, திரையுலகத்துக்கே குரல் கொடுக்காத ரஜினி, நாளை அரசியலுக்கு வந்தால் மட்டும் குரல்கொடுப்பாரா?
பா.ஜ., அரசு பொறுப்பேற்றதில் இருந்து வரி மேல் வரி விதிக்கிறது. ஹிந்தி சினிமாவை மட்டுமே வாழ வைக்கிறது மத்திய அரசு நினைக்கிறது. மாநில மொழி படங்களை மத்திய அரசு ஒடுக்குகிறது.
இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.