இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நாடு முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி., நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதில் பலர் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சினிமா துறையில் இருப்பவர்கள் ஜிஎஸ்டி.,க்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஜிஎஸ்டி.,யோடு மாநில அரசின் நகராட்சி வரி 30 சதவீதமும் சேர்ந்து வசூலிக்கப்பட இருப்பதால் சினிமா முற்றிலும் பாதிக்கப்படும் என திரைத்துறையினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக திங்கள் முதல் தியேட்டர்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகரும், இயக்குநர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜிஎஸ்டிக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவன் நான் தான். சினிமா துறையினர் ஒட்டுமொத்தமாக இணைந்து போராட வேண்டும் என்று நான் ஆரம்பத்திலேயே கூறினேன். ஆனால் இப்போது காலம் தாழ்த்தி தமிழ் சினிமாவினர் போராடுவது ஏன்?.
ஜிஎஸ்டிக்கு குரல் கொடுத்த கமலுக்கு பாராட்டுகள். ஆனால் ரஜினி ஏன் இதைப்பற்றி பேச மறுக்கிறார். உங்களை வாழவைத்த திரையுலகத்துக்கு ஏன் குரல்கொடுக்கவில்லை?, திரையுலகத்துக்கே குரல் கொடுக்காத ரஜினி, நாளை அரசியலுக்கு வந்தால் மட்டும் குரல்கொடுப்பாரா?
பா.ஜ., அரசு பொறுப்பேற்றதில் இருந்து வரி மேல் வரி விதிக்கிறது. ஹிந்தி சினிமாவை மட்டுமே வாழ வைக்கிறது மத்திய அரசு நினைக்கிறது. மாநில மொழி படங்களை மத்திய அரசு ஒடுக்குகிறது.
இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.