டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜிஎஸ்டி வரி விதிப்பு, மாநில அரசின் வரி விதிப்பு என இரு வரிகளால் தமிழ்நாட்டில் தியேட்டர் கட்டணங்கள் இன்று முதல் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள் கிழமை ஜுன் 3ம் தேதி முதல் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடும் என நேற்று மாலை திடீரென அறிவித்தார்கள்.
ஜுன் 30ம் தேதியான நேற்று 7 படங்கள் வெளிவந்தன. வரும் ஜுலை 7ம் தேதியும் சில புதிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இனி வெளிவர உள்ள படங்களைக் கூட வெளியிடாமல் நிறுத்தி விடலாம். அவற்றை நிறுத்தினாலும் கூட ஓரளவிற்கு பாதிப்பு வரும். அதே சமயம் நேற்று வெளியான படங்கள் திங்கள் முதல் தியேட்டர்களில் திரையிடப்பட மாட்டாது என்றால் அதனால் ஏற்படும் நஷ்டங்களுக்கு யார் பொறுப்பாவார்கள்.
நேற்று வெளிவந்த 7 படங்களில் ஒரு படத்தைத் தவிர அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள். அந்த ஒரு படம் இயக்குனர் கண்ணன் தானே சொந்தமாகத் தயாரித்துள்ள இவன் தந்திரன் படம். இந்த 7 படங்கள் திங்கள் முதல் தியேட்டர்களில் இல்லை என்றால் எத்தனை கோடி நஷ்டம் ஏற்படும்.
ஜிஎஸ்டி வரி ஜுலை 1 முதல் அமல்படுத்தப்படப் போகிறது என்பது எப்போதோ அறிவிக்கப்பட்ட ஒரு விஷயம். தமிழ்த் திரையுலகத்தில் பல சங்கங்கள் இருக்கின்றன. முன்னரே அனைவரும் கலந்து ஆலோசித்து தமிழக அரசிடம் ஆலோசித்து இது பற்றிய ஒரு முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், இப்போது திடீரென ஸ்டிரைக் என்றால் நேற்று வெளியான படங்களின் தயாரிப்பளார்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
ஏற்கெனவே, 'இவன் தந்திரன்' படத்தின் இயக்குனர் கண்ணன் கண்ணீர் மல்க இயக்குனர்கள் சங்கத்தினர் ஏதாவது செய்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தியேட்டர் சங்கத்தினர் இப்படி யாரையும் கலந்து ஆலோசிக்காமல் எப்படி ஸ்டிரைக்கை அறிவிக்கலாம் என திரையுலகத்தில் பலர் கேட்கிறார்கள்.