ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அடையாளம் தேடும் சிறுவர்களை கொண்டு கோலிசோடா இயக்கினார், அது பெரும் வெற்றி பெற்றது. அடுத்து அவர் விக்ரம் நடிப்பில் இயக்கிய 10 எண்றதுக்குள்ள கமர்ஷியல் படம், தோல்வி அடைந்தது. அதன் பிறகு இயக்கிய கடுகு சுமாராக போனது. இந்த நிலையில் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார் விஜய் மில்டன்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் கூடைபந்து விளையாட்டை மையமாக கொண்டது. இதில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். மலையாள நடிகரும், கதாசிரியருமான செம்பன் வினோத் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புதுமுகங்களுக்கு கூடைப்பந்து போட்டி பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. நிஜமான கூடைப்பந்து விளையாட்டு வீரர்களும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 10ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுவும் கோலிசோடா போன்று குறைந்த பட்ஜெட்டில் தயாராகிறது. ஏற்கெனவே அறிவழகன் இயக்கிய வல்லினம் படம் கூடைபந்து விளையாட்டை மையமாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.