ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
என்னை யார் கைவிட்டாலும், திரையுலகம் கைவிடாது, என, நடிகர் ஆனந்தராஜ் கூறினார். ஆதி, ஆனந்தராஜ் நடித்த, மரகத நாணயம் படம், சமீபத்தில் திரைக்கு வந்தது. தமிழகம், கேரளா, ஆந்திராவில் வெற்றி பெற்றதுடன், ஆனந்தராஜின் நடிப்பு, பலரது பாராட்டை பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்னை, எழும்பூரில் உள்ள ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவியருடன், மரகத நாணயம் படத்தை, ஆனந்தராஜ் குடும்பத்துடன், தியேட்டரில் பார்த்து ரசித்தார்.
பின், ஆனந்தராஜ் கூறியதாவது: மரகத நாணயம் போன்ற படங்களை, சில இயக்குனர்கள் மட்டுமே தருவர். அப்பட்டியலில், இப்படத்தின் இயக்குனர் சரவண் இணைந்துள்ளார். மீண்டும், என்னை நாயகனாக நடிக்க அழைக்கின்றனர். இதுவே போதும் என, இருக்கிறேன்.
சத்யா, தானா சேர்ந்த கூட்டம் உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இன்னும் சில படங்கள் குறித்து, பேச்சு நடந்து வருகிறது. என்னை யார் கைவிட்டாலும், திரையுலகம் கைவிடவில்லை. வாரிசு நடிகர்களுடன், நான் சேர்ந்து நடிக்கும் படங்கள் வெற்றிப்படமாக அமைந்து விடுகின்றன. சத்யா, தானா சேர்ந்த கூட்டம் படங்கள் பிரமாதமாக வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.