மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னை சாஸ்திரி பவனில் தணிக்கை குழு தலைவர் மதியழகனை, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால்...
"இன்றைய சூழலில் தமிழ் திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமை படுத்த வேண்டும். திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் தணிக்கை சான்றிதழுக்கு அனுப்புவதால் தான் படங்கள் ரிலிஸ் தேதியை விட்டு தள்ளிப்போகின்றன. படத்தின் ரிலிஸ் தேதிக்கு ஒரு மாதம் அல்லது அதற்கு முன்னதாகவே தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்தால் மட்டுமே திரைப்படம் வெளியாகும் போது எந்தவித தடங்களும் ஏற்படாது. இது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
ஜி.எஸ்.டி காரணமாக தமிழ்திரையுலகம் இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது, இது சினிமா துறைக்கு பெறும் இழப்பு. ஜிஎஸ்டியை குறைக்க வலியுறுத்தி நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமல் கையெழுத்திட்ட கடிதமும் அனுப்பட்டுள்ளது".
இவ்வாறு விஷால் தெரிவித்தார்.