ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மதயானைக்கூட்டம், கிருமி, என்னோடு விளையாடு ஆகிய படங்களில் நடித்தவர் கதிர். தற்போது விக்ரம் வேதா, சத்ரு, பரியேறும் பெருமாள், சிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜய் சேதுபதி என்ற இரண்டு முன்னணி நடிகர்கள் இருக்க, கதிரும் மூன்றாவது ஹீரோ போன்று ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்திருக்கிறார்.
இந்த அனுபவம் குறித்து கதிர் கூறும்போது, விக்ரம் வேதா படத்தில் என்னை நடிக்க கேட்டபோது, ஹீரோவாக நடித்து வரும் நேரத்தில் கேரக்டரில் நடித்தால் வளர்ச்சியை பாதிக்குமோ என்று தயங்கினேன். ஆனால், விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, இந்த படத்தில் நீயும் ஒரு ஹீரோதான் என்று சொன்னார். அதன்பிறகு தான் ஒரு தைரியம் வந்து நடிக்க ஒத்துக்கொண்டேன்.
மேலும், இப்படத்தில் வரலட்சுமி எனக்கு ஜோடி என்றபோது மனதளவில் அடுத்த பயம் வந்து விட்டது. தாரைத் தப்பட்டை படத்தில் அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போயிருந்தேன். அதனால், படப்பிடிப்பு தளத்துக்கு அவர் வந்தபோது பேசாமலேயே இருந்தேன். ஆனால் வரலட்சுமி என்னுடன் சகஜமாக பேசினார். அதன்பிறகுதான் அவர் மீதிருந்து பயம் படிப்படியாக குறைந்தது என்று கூறும் கதிர், இப்போது வரலட்சுமி எனக்கு நல்லதொரு தோழியாகி விட்டார் என்கிறார்.