ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை பாவனா கடத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்சர் சுனில், சமீபத்தில் நடிகர் திலீப்பிற்கு பணம் கேட்டு ஒரு மிரட்டல் கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக திலீப், காவல்துறையில் புகார் அளித்திருந்தார். மேலும் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கூறியிருந்தார் திலீப். அதன்படி நேற்று கொச்சியில் உள்ள ஆலுவா போலீஸ் கிளப்பில் வைத்து ஏடிஜிபி சந்தியா முன்னிலையில் திலீப் மற்றும் அவரது நண்பரான நாதிர்ஷா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது..
நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆரம்பித்த இந்த விசாரணை நள்ளிரவு தாண்டியும் அதாவது சுமார் 12 மணி நேரம் வரை நடைபெற்றது. விசாரணையில் போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் திலீப்பும், நாதிர்ஷாவும் பதிலளித்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்த திலீப், போலீசார் தன்னிடம் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் பார்க்கும்போது விசாரணை சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக கூறியுள்ளார். தேவைப்பட்டால் திலீப் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர்.