'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலேசியாவில் தோட்ட தொழிலாளர்களாக உள்ள தமிழர்களின் கதை தோட்டம் என்ற பெயரில் சினிமாவாக தயாராகி உள்ளது. புளூ ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை அரங்கண்ணல்ராஜ் இயக்கி உள்ளார். சிங்கைஜெகன், தனா, ரூபன் லோகன், ஜி.வி. அகில்பர்மன் ஆகியோர் நடித்துள்ளனர். விவியாஷான் என்ற சீன நடிகை முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் அரங்கண்ணல் ராஜ் கூறியதாவது: ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டே. இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும்.. அந்த விவசாய கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப் பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே. அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகி விட்டது.
தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கை மாறி விட்டது. அப்படி கை மாற இருந்த ஒரு தோட்டத்தை போராடி எப்படி மீட்கிறார்கள் என்பது கதை. 200 வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சனையை இதில் அலசியிருக்கிறோம்.
அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ்ப்பையனுக்கும், சீனப்பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம். மலேசிய நடிகர் நடிகைகள் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து தோட்டம் படத்தை உருவாக்கி உள்ளோம். விரைவில் உலகமெங்கும் தோட்டம் வெளியாகிறது என்றார் இயக்குனர்.