டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் ஷாருக்கான் தற்போது ஜாப் ஹாரி மெட் சீஜல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானிடம், உங்கள் வாழ்க்கையை படமாக எடுக்க எந்த டைரக்டரையாவது அனுமதிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஷாருக், மக்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு மிகவும் சுவாரஸ்யமான விஷயம் எதுவும் என் வாழ்க்கையில் நடக்கவில்லை. உங்களுக்கு நல்ல கதை எதுவும் கிடைக்கவில்லை என்றால், நான் வேண்டுமானால் எழுதுகிறேன். அவர்கள் அப்படி என்ன என்னை பற்றி படமாக எடுக்கப் போகிறார்கள். எனது வாழ்க்கையின் வெற்றியின் கதையாக தான் இருக்கும்.
அந்த மிகவும் போராக இருக்கும். ஒருவேளை அது சர்ச்சையாக்கப்படலாம். அப்படி சர்ச்சையாகா விட்டால் அது போரான கதையாக தான் இருக்கும். நிஜமாகவே வெற்றி கதைகள் அனைத்தும் போரான கதைகளாகவே இருக்கும் என்றே நான் சொல்வேன். அதனால் அத்தகைய கதையை யாரும் எடுப்பதை நான் விரும்பவில்லை. அதே சமயம் என் வாழ்க்கை படத்தை யாரும் எடுக்கக் கூடாது என நான் சொல்லவில்லை. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு என் வாழ்க்கை இதுவரை பெரிய விஷயமாக இருந்ததில்லை என்றார்.