தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பாகுபலி' படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டும் வெளிவந்து சுமார் 2500 கோடி வரை வசூலித்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பெரிய அளவில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் வெளியிட்டு தெலுங்குத் திரையுலகத்தைப் பற்றி பெரிய அளவில் பேச வைத்ததில் ராஜமௌலி ஒரு சாதனையாளராகவே இன்று வரை தெரிகிறார்.
ஆனால், சில தினங்களுக்கு முன் தான் அளித்த பேட்டியின் மூலம் ஒரு சர்ச்சை வளையத்திற்குள் ராஜமௌலியை சிக்க வைத்துவிட்டார் ஸ்ரீதேவி. ராஜமௌலி மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருந்தேன், அவர் என்னைப் பற்றி தவறானத் தகவலை எப்படி பேட்டியில் கூறலாம் என்ற ரீதியில் ஸ்ரீதேவி அளித்த பேட்டி தெலுங்குத் திரையுலகில் தற்போது புகைய ஆரம்பித்துவிட்டது.
தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் ஸ்ரீதேவி நடித்திருந்தாலும், ராஜமௌலி நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லியிருக்கிறார் என்றே ஸ்ரீதேவி அவருடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி 'பாகுபலி' படத்தில் நடிக்க அப்படி 'டிமான்ட்' செய்தாரா இல்லையா என்பதைப் பற்றி தக்க ஆதாரங்களுடன் ராஜமௌலி சொன்னால் மட்டுமே இந்த சிறிய கறை அவரை விட்டு விலகும். அதுவரை, ஆளுக்கொரு விதமாக கமெண்ட் அடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.