ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வெள்ளிக்கிழமை சிம்புவின் ஏஏஏ, ஜெயம்ரவியின் வனமகன் ஆகிய இரண்டு படங்களுக்கிடையேதான் கடும் போட்டி நிலவியது. இதில் வனமகன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில், சிம்பு படத்திற்கு எதிர்பார்த்தபடி விமர்சனங்கள் கிடைக்கவில்லை. இதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. அதன்காரணமாக அடுத்த வாரமும் தொடரும் என் நினைத்த அந்த படம் ஒரு வாரத்தோடு திரையிடப்பட்ட தியேட்டர்களை விட்டு வெளியேறுகிறது.
ஆனால், வனமகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்காரணமாக, ஏற்கனவே திரையிட்ட தியேட்டர்களில் இரண்டாவது வாரமும் அப்படம் தொடர்கிறது. ஆக, முக்கிய தியேட்டர்களில் வனமகன் மீண்டும் திரையிடப்படுவதால், வரும் ஜூன் 30-ந்தேதி அன்று வெளியாகும் படங்களுக்கு சரியான தியேட்டர்களில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் 8 படங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டபோதும் கடைசி நேரத்தில் 6 படங்கள் வெளியானாலும் அதில் சில படங்களுக்கு மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.