டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருப்பூர் அருகே நடைபெற்ற வயக்காட்டு மாப்பிள்ளை படத்தில் நடித்து விட்டு கடந்த ஞாயிறு அன்று இரவு திருப்பூர் அருகே உள்ள பெருமாத்தூரில் இருந்து சேலத்தில் இருந்து சென்னை திரும்பியபோது ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடன் வந்த மூன்று நபர்களால் தாக்கப்பட்டு வழிப்பறி செய்யப் பட்டார் காமெடி நடிகர் கொட்டாச்சி. அவரிடமிருந்து 2,500 ரூபாய் மற்றும் 2 பவுன் செயின், மொபைல், ஆதார், ஏடிஎம் கார்டு என பறித்து விட்டு ஓடி விட்ட னர்.
இதையடுத்து, நடிகர் சேலத்தைச் சேர்ந்த நடிகர் பெஞ்சமின் உதவியால் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததை வைத்து அந்த மூன்று நபர்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ஒருவன் பிடிபட்டுள்ளான். அந்த நபர் கொடுத்த தகவலின் பேரில் மற்ற இரண்டு நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி கொட்டாச்சி கூறுகையில், கடந்த திங்கள் கிழமை எனது பிறந்த நாள் என்பதால் வயக்காட்டு மாப்பிள்ளை படப்பிடிப்பில் இருந்து ஞாயிற்று கிழமை இரவு சென்னை திரும்பியபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. என்னிடம் வழிப்பறி செய்தவர்களில் ஒருவனை நேற்று போலீசார் பிடித்து விட்டனர். அவன் கொடுத்த தகவலின் பேரில் இப்போது மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள். எப்படியும் அவர்களையும் பிடித்து விடுவார்கள். அவர்கள் பிடிபட்டதும் எனக்கு தகவல் வரும். அதன் பிறகு என்னிடமிருந்து அவர்கள் பறித்த பொருட்களை சேலம் காவல் நிலையத்திற்கு சென்று வாங்கி வருவேன். மேலும், எனது பிறந்த நாள் அன்று இப்படி நடந்தது ரொம்ப வருத்தமாக உள்ளது என்கிறார் கொட்டாச்சி.