இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த பிப்ரவரியில் வெளியான 'எஸ்றா' படத்தை தொடர்ந்து பிருத்விராஜ் நடிப்பில், வரும் ஜூன்-29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் 'தியான்'. தனது சகோதரர் இந்திரஜித் மற்றும் நண்பர் முரளி கோபி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்துள்ள இந்தப்படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். வடமாநிலங்களில் வரலாற்று பின்னணி கொண்ட நகரங்களில் இதன் கதையும், கதைக்களமும் அமைந்துள்ளது. அதனால் இந்தப்படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் படத்தின் துவக்கத்திலும் அவ்வப்போது இடையில் சில இடங்களிலும் விளக்கப்படுத்தி கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல ஒரு கம்பீரமான பின்னணி குரல் தேவைப்பட்டது..
அந்தவிதமாக இந்தப்படத்திற்கு வாய்ஸ் கொடுத்திருப்பவர் சாட்சாத் மோகன்லாலே தான். பிருத்விராஜ் வைத்த வேண்டுகோளை ஏற்று மோகன்லால் இந்த உதவியை செய்துள்ளார்.. இதற்கு முன் மேஜர் ரவி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'பிக்கெட்-43' படத்திலும் மோகன்லால் வாய்ஸ் கொடுத்திருந்தார். அது மேஜர் ரவியின் நட்புக்காக, ஆனால் இந்தமுறை பிருத்விராஜ் படத்திற்கு வாய்ஸ் கொடுத்ததில் ஸ்பெஷல் காரணம் உண்டு.. ஆம்.. பிருத்விராஜ் டைரக்சனில் அடுத்ததாக 'லூசிபர்' என்கிற படத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதும், இந்த 'தியான்' படத்திற்கு கதையெழுதிய முரளிகோபி தான் அந்தப்படத்துக்கும் கதையெழுதி இருப்பதும் மோகன்லாலை எந்த மறுப்பும் சொல்லாமல் வாய்ஸ் கொடுக்க வைத்துவிட்டதாம்.