பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
நடிகர் துல்கர் சல்மானுக்கு இந்த வருடம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக அமைந்துவிட்டது.. காரணம் கடந்த மாதம் தான் அழகான பெண் குழந்தைக்கு அப்பாவாக ஆனார் துல்கர் சல்மான். அந்தவகையில் இந்த வருடம் ரம்ஜான் விருந்தை சிறப்பாக கொண்டாடியுள்ளார் துல்கர் சல்மான்.. குறிப்பாக அவரது நெருங்கிய நண்பரான 'மச்சான்' விக்ரம் பிரபு இந்த வருட ரம்ஜான் கொண்டாட்டத்தில் துல்கருடன் இணைந்து கலந்துகொண்டுள்ளார்..
இவர்கள் இருவரும் பிரியாணி சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இந்தமுறை நேற்று தனது குடும்பத்துடன் சென்னையிலே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய துல்கர் சல்மான், அதற்கு முன்னதாக தனது தந்தை மம்முட்டியுடன் சென்னையில் பிரபலமான பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையும் நடத்திவிட்டு வந்துள்ளார்.