‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாள சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் தான் தேசியவிருதுபெற்ற நடிகர் சலீம்குமார். ஒருகாலத்தில் மோகன்லால், மம்முட்டி இருவரின் அன்புக்கு பாத்திரமாக இருந்த இவர் கடந்த சில வருடங்களாக மோகன்லாலுடன் சற்றே மனத்தாங்கல் கொண்டிருந்தார்.
குறிப்பாக கடந்தவருடம் நடந்த கேரள சட்டமன்ற தேர்தலில், தேர்தலில் போட்டியிட்ட ஒரு நடிகருக்காக, மோகன்லால் மேடை பிரச்சாரம் செய்தது தவறு என கூறி நடிகர் சங்கத்தில் இருந்து விலகும் அளவுக்கெல்லாம் போனார் சலீம்குமார்.
இந்த மனத்தாங்கல் காரணமாகவே கடந்த 2011ல் வெளியான 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' படத்திற்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்காமல் இருந்தார் சலீம்குமார்.. ஆனால் சலீம்குமாரை சமாதானப்படுத்தியதோடு, மோகன்லால் உங்கள் மீது எப்போதும் போல மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என கூறி அவரது மனக்கசப்பை மாற்றியிருக்கிறார் பிரபல இயக்குனர் லால் ஜோஸ்.
அதுமட்டுமல்ல தற்போது மோகன்லாலை வைத்து தான் இயக்கிவரும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்திலும் சலீம்குமாரை மிக முக்கியவேடம் ஒன்றில் நடிக்கவைத்துள்ளார். சுமார் ஆறு வருட பிரிவிற்கு பின் மோகன்லாலும் சலீம்குமாரும் இணைந்து நடிப்பதை பார்த்த படக்குழுவினர் மிகவும் சந்தோஷமடைந்துள்ளனர்.