டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட்டல் புகார் கூறப்பட்டுள்ளது. தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த் மீது மதுரவாயல் லட்சுமி நகரை சேர்ந்த பாலு என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், நான் வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்து வருகிறேன். ராஜாஅண்ணாமலைபுரம் சேமியர்கள் சாலையில் வசிக்கும் நடிகர் சித்தார்த்தும், அவரது தந்தை சூரிய நாராயணனும் என்னை அணுகி அவர்கள் வீட்டுக்கு உள்அலங்காரம் செய்யும்படி கேட்டனர். அதற்கு ரூ.6 லட்சத்து 63 ஆயிரம் செலவாகும் என திட்ட மதிப்பீடு கொடுத்தேன். அவர்கள் சம்மதித்தனர். நானும் அவர்கள் வீட்டில் உள் அலங்கார பணியை செய்து முடித்தேன். ஆனால் பேசிய படி பணம் தரவில்லை. மொத்தம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே தந்துள்ளனர். மீதி ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்தை தரவில்லை. பல தடவை அவர்களிடம் கேட்டு விட்டேன் தரவில்லை.
கடந்த 13ம்தேதி மீண்டும் அவர்கள் வீட்டுக்கு போய் பணம் கேட்டேன். அப்போது சித்தார்த்தும், சூரியநாராயணனும் பணம் தர முடியாது என்று சொல்லி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பணத்தை வாங்கிக் தரும்படி கேட்டு கொள்கிறேன். என்று கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மீது விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.