இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மலையாள நடிகர் திலீப்பும், அவரது மனைவி மஞ்சுவாரியாரும் பிரிய பாவனா தான் காரணம், அதனால் அவர் தான் அவரை கடத்தி துன்புறுத்த ஏற்பாடு செய்திருக்ககூடும் என்ற தகவல் பரவியது. இதனை திலீப் மறுத்து வந்தார்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்சர் சுனில் திலீப்புக்கு எழுதிய கடிதத்தில் பாவனாவை கடத்த சொன்னது திலீப்தான் என்கிற தொணியில் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். ஆனால் இதனை மறுத்து திலீப் பல்சர்சுனில் தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் பாவனா கடத்தல் விவாகரத்தில் தனக்கு துளியும் சம்பந்தம் இல்லை என்றும், இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக திலீப் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அவர் எழுதியிருப்பதாவது:
பாவனா கடத்தல் விவகாரத்திற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக எனக்கு ஆதரவாக உள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மலையாள திரைப்பட உலகில் எனக்கு உள்ள மரியாதையை கெடுக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். என் மீது ரசிகர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கவும், விரைவில் வெளியாக உள்ள ராமலீலா என்ற திரைப்படத்தை வெளிவராமல் தடுக்கவும் நடைபெற்று வரும் கூட்டு சதியாகவே இதை நான் பார்க்கிறேன்.
கடத்தல் விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி எழுந்த சர்ச்சையால் கடந்த சில மாதங்களாக நான் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.