ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மஞ்சப்பை படத்துக்கு பிறகு வெற்றியை ருசிக்கவில்லை விமல். அதற்கு பிறகு நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல், அஞ்சல, மாப்பிள்ளை சிங்கம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அவர் நடித்து முடித்துள்ள ரெண்டாவது படம் வெளிவரவே இல்லை. இதனால் ஒரு கட்டாய வெற்றி தேவை என்கிற நிலையில் இருக்கிற விமல், தனது பாணி காமெடியில் ஒரு பேமிலி செண்டிமென்ட்ட படம் தயாரித்து, நடிக்க விரும்பினார். மலைக்கோட்டை, தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், பட்டத்து யானை படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் சொன்ன கதை விமலுக்கு பிடித்து விடவே அதையே தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அதுதான் மன்னர் வகையறா.
விமலுடன் ஆனந்தி, சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர், ஜெயபிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.ஜி.முத்தையாக ஒளிப்பதிவு செய்கிறார், ஜாக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். சில பிரச்சினைகள் காரணமாக கிடப்பில் போட்டிருந்த மன்னர் வகையறாவை இப்போது விரட்டி சுறுசுறுப்பாக்கி இருக்கிறார் விமல். தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது மன்னர் வகையறா. அடுத்த மாதம் வெளிவரலாம் என்று தெரிகிறது.