அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
இந்திய அளவில் 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதல் ஹிந்தி, அதிலும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட 'பாகுபலி 2' படம் பெற்ற பெருமை பாலிவுட்டின் பெரும் ஜாம்பவான்களை கொஞ்சம் பொறாமை கொள்ள வைத்தது. நேரடி ஹிந்திப் படங்கள் சாதிக்காத ஒரு சாதனையை ஒரு தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளியான ஒரு படம் சாதித்தது என்பதை அவர்கள் அவ்வளவு சுலபத்தில் மறக்க மாட்டார்கள்.
'பாகுபலி 2' படம் வெளிவந்து பல சாதனைகளை இந்திய அளவில் முறியடித்து 1700 கோடி ரூபாய் வசூலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. 'தங்கல்' படம் சீனாவில் 1000 கோடி வசூலைத் தொட்டு இந்தியப் படங்களின் உலக அளவிலான வசூலில் 'பாகுபலி 2' சாதனையை முறியடித்ததும் தான் பாலிவுட்டினர் கொஞ்சம் மகிழ்ச்சியடைந்தார்கள்.
பல முன்னணி 'கான்' நடிகர்கள் 'பாகுபலி 2' படத்தின் மகத்தானை சாதனை பற்றியோ, படத்தைப் பற்றியோ வாயைத் திறந்து எந்தக் கருத்தையும் சொல்லாமல் இருந்தார்கள். 'டியூப்லைட்' படம் பற்றிய சமீபத்திய சந்திப்பு ஒன்றில் 'பாகுபலி 2' பற்றிய கேள்விக்கு சல்மானிடம் கேட்ட போது வெளிப்படையாக பதிலளித்திருக்கிறார்.
“பாகுபலி 2' படத்தின் பல வேலைகளைச் செய்திருக்கிறார்கள். ரசிகர்கள் படத்தை மிகவும் நேசித்தார்கள். அது டப்பிங் படம் என்றாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அது தமிழிலிருந்து டப்பிங் செய்யப்பட்டதா, தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட்டதா என அவர்கள் யோசிக்கவில்லை. அதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு படத்தை வெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள்,” என கூறியிருக்கிறார்.