சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த காளகேயர்கள் என்கிற அம்சமும், அவர்கள் பேசுவதாக அமைக்கப்பட்ட கிளிக்கி மொழி பாஷையும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
குறிப்பாக குழந்தைகளிடம் இந்த கிளிக்கி மொழி ரொம்பவே பிரபலமானது. அதுமட்டுமா..? கொடூரமான உருவத்துடன் காளகேயர் பாஷை பேசிய அந்த காளகேயர் தலைவனை..? உடல் மொழியிலும் வசனத்திலும் தன்னை ஒரு காளகேயனாகவே மாற்றியிருந்த அந்த நடிகர் தான் பிரபாகர் என்பவர். அந்த கிளிக்கி பாஷைக்கும் தனது வித்தியாசமான உச்சரிப்பால் உயிர் கொடுத்தவர்.
தற்போது அவருக்கு தெலுங்கில் இருந்து மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது. அதுவும் மம்முட்டி படத்தில்.. 'பரோல்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான சரத் சந்தித் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக் கைதியாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள இந்தப்படத்தின் கதையை அஜித் பூஜப்புரா என்பவர் எழுதியுள்ளார்.