இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜிஎஸ்டி வரி விதிப்பு யாருக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது ஜுலை 1ம் தேதிக்குப் பிறகே தெரியும். ஆனால், அதற்குள்ளாகவே நம் தமிழ் இயக்குனர்களின் தமிழ்ப் பற்று காற்றில் பறக்க ஆரம்பித்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கே வரி விலக்கு என்று சொன்ன பிறகுதான் நமது இயக்குனர்களுக்கு தமிழ்ப் பற்று முன்பைக் காட்டிலும் அதிகமானது.
அதன்பின் தேடித் தேடி, தமிழில் பெயர் வைக்க ஆரம்பித்தனர். வரி விலக்கு சென்ற பின் அது தமிழில் இல்லை, அகராதியிலேயே இல்லை என்று சொன்னால் உடனே அந்தப் பெயர்களை மாற்றுவதற்கும் அவர்கள் தயாராக இருந்தார்கள். அப்போதே இது குறித்து தமிழ் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார்கள்.
வெங்கட் பிரபு இயக்க சூர்யா, நயன்தாரா நடித்து வெளிவந்த 'மாசு என்கிற மாசிலாமணி' படத்திற்கு முதலில் 'மாஸ்' என்றுதான் தலைப்பு வைத்தார்கள். அதன் பின் 'மாஸ் என்கிற மாசிலாமணி' என்றார்கள், அடுத்து 'மாஸு என்கிற மாசிலாமணி' என்றார்கள். கடைசியாகத்தான் 'மாசு என்கிற மாசிலாமணி' என்றார்கள். கடைசியில் 'மாசு' தூசாகவே போய்விட்டது. வரி விலக்குக்காக எப்படியெல்லாம் மாற்றினார்கள் என்பதற்கு இதுவே பெரும் உதாரணம்.
இப்போது முதல் முறையாக புதியதாக ஆரம்பிக்க உள்ள ஒரு படத்திற்கு 'பார்ட்டி' என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தை 'மாசு' புகழ் வெங்கட் பிரபுதான் இயக்க உள்ளார். படத்தின் முதல் பார்வையிலேயே 'சரக்கு பாட்டில்'களை வைத்து டிசைன் செய்து தன்னுடைய 'பார்ட்டி புராணத்தை' ஆரம்பித்து வைத்துள்ளார்.