தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வரும் '2.0' படத்தின் பிரமோஷன் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சற்று முன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ராஜு மகாலிங்கம் ஒரு வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் '2.0' படத்தின் பிரமோஷனுக்காக பல வேலைகள் நடந்து வருவது தொகுக்கப்பட்டுள்ளது. அதில், 600 பேர் இதற்காக பணியாற்றி வருவதாகவும், 12 கிலோ மீட்டர் நூல், 1500 அடி நீள துணியும் பயன்படுத்தப்படுவதாகவும், விரைவில் 2.0 படத்தின் உலகச் சுற்றுப் பயணம் ஆரம்பமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'2.0' படத்தை உலக அளவில் மிகவும் சிறப்பாகக் கொண்டு போய்ச் சேர்க்க படம் வெளியாவதற்கு 7 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இதுவரை இந்திய சினிமா கண்டிராத அளவிற்கு இந்தப் படத்திற்கான திட்டமிடல் வேலைகளும், மற்ற பிரமோஷன் பணிகளும் நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பாகுபலி 2' படத்தை விட '2.0' படத்தை உலகின் பல மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு செல்வார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.