ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சி.கல்யாண். தமிழிலும் சில படங்களை தயாரித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதன் தலைவராகவும் இரண்டு முறை இருந்தார். சேம்பருக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டதில் சி.கல்யாணின் பங்கு முக்கியமானது. தற்போது அவர் உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கல்யாண் கூறும்போது "எனது பதவி காலத்தில் இந்திய சினிமாக்களின் உலக அளவிலான மார்க்கெட்டிங்கை விரிவுபடுத்த பாடுபடுவேன்" என்றார்.
இதையொட்டி கல்யாணுக்கு பாராட்டு விழா நடந்தது. சேம்பர் தலைவர் ஆனந்தா சுரேஷ், செயலாளர்கள் ரவிகொட்டாரக்கரா, முரளிராமசாமி, பொருளாளர் கிருஷ்ணாரெட்டி, முன்னாள் செயலாளர்கள் அருள்பதி, கட்ராகட்ட பிரசாத், திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், செயலாளர் டி.சிவா, துணைதலைவர் அன்பாலயா பிரபாகரன், பொருளாளர் அழகன் தமிழ்மணி, வினியோகஸ்தர்கள் திருப்பூர்சுப்ரமணி, செல்வின்ராஜ், ஷாகுல்ஹமீது, தேவராஜ், டைரக்டர் பி.வாசு, நடிகர்கள் எஸ்.வி.சேகர், சின்னி ஜெயந்த், சித்ராலட்சுமணன், மேலும் தெலுங்கு, கன்னட, மலையாள பட உலகின் திரளான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.