10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா, விவாகரத்து கோரிய வழக்கில் ஜூலை 4-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது இளைய மகள் செளந்தர்யா. செளந்தர்யாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
செளந்தர்யா தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். இருவரையும் சமாதானம் செய்ய இருவீட்டாரும் முயற்சித்து வந்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் செளந்தர்யா, விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்தார். அதேப்போன்று அஸ்வினும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக செளந்தர்யா மற்றும் அஸ்வின் இருவரும் இன்று நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை கொடுத்தனர். இருதரப்பு விளக்கத்தையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தீர்ப்பை ஜூலை 4-ம் தேதி வழங்குவதாக கூறி வழக்கை தள்ளி வைத்தது.