மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று முதல் ஆரம்பமான 39வது சர்வதேசத் திரைப்பட விழாவில் பாகுலி 2 படம் சிறப்புத் திரையிடலாகத் திரையிடப்பட்டது. அத்துடன் பாகுபலி படத்தின் முதல் பாகம், குல்ஷன் குரோவர் நடித்துள்ள ஹிந்திப் படமான பேட்மேன், குஜராத்தி திரைப்படமான பே யார், அசாமிய திரைப்படமான கொத்தநோடி, கன்னடத் திரைப்படமான யு டர்ன், பெங்காலித் திரைப்படமான எ டெத் இன் குன்ச் ஆகிய இந்தியத் திரைப்படங்கள் இந்தியப் படப் பிரிவில் திரையிடப்படுகின்றன.
புகழ் பெற்ற ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல் திரையிடலாக பாகுபலி 2 திரைப்படம் திரையிடப்பட்டது இந்தியத் திரையுலகத்திற்குக் கிடைத்த பெருமை. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மாஸ்கோ சென்றுள்ளார்.
“மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக ரஷ்யாவில் இருப்பது மிகவும் உற்சாகமாக உள்ளது. பாகுபலி 2 படத்தை முதலில் திரையிடத் தேர்வு செய்தது மிகவும் பெருமையாக உள்ளது,” என ராஜமௌலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜுன் 22ம் தேதி முதல் ஜுன் 29ம் தேதி வரை மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுகிறது. பல சர்வதேத் திரைப்பட விழாக்களில் பாகுபலி 2 பங்கு பெறுவதன் மூலம் அந்தப் படத்திற்கான புதிய வியாபார ஏரியாக்கள் உருவாகும், மேலும் இந்தியத் திரையுலகத்திற்கும் ஒரு பெருமை கிடைக்கும்.