ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பிரபாஸ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், ராணா, சத்யராஜ், நாசர் நடிப்பில் ராஜ மவுலி இயக்கிய பிரமாண்ட சரித்திர படம் பாகுபலி-2. இந்த படம் முதல் பாகத்தை விட அதிகப்படியாக வசூலித்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக பல வருடங்களாக இரவு பகலாக கடினமாக உழைத்த ராஜமவுலி, அதையடுத்து தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்று ஓய்வெடுத்து வந்தவர், சமீபத்தில் தான் இந்தியா திரும்பியிருக்கிறார்.
இதற்கிடையே, ராஜமவுலியின் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர்., நடிப்பதாக ஆந்திர மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரது அடுத்த படத்திற்கும் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தின் ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஜமவுலியிடம், அடுத்தபடம் குறித்து மீடியாக்கள் கேட்டபோது, அடுத்த படம் குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்துள்ளார்.
மேலும், பாகுபலி-2 படத்திற்கு பிறகு ராஜமவுலியின் புகழ் பாலிவுட்டிலும் பரவி விட்டதால், இப்போது அவரை இந்தி பட நிறுவனத்துக்கு படம் இயக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் அழைத்த வண்ணம் உள்ளார்களாம். ஆனால் ராஜமவுலிக்கு ஏற்கனவே சான்ஸ் கொடுத்த தெலுங்கு பட அதிபர்கள் தங்களுக்கு படம் இயக்கித்தருமாறு அவரை இன்னொரு பக்கம் துரத்துகிறார்களாம். அதனால் அடுத்த படத்தை யாருக்கு இயக்குவது என்ற பெரும் குழப்பத்தில் ராஜமவுலி இருப்பதாகவும் செய்தி பரவியிருக்கிறது.