டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் துல்கர் சால்மான், தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கில் உருவாகி வரும் மகாநதி படத்திலும் நடிக்கிறார். மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார்கள். எவடே சுப்ரமணியம் தெலுங்கு படத்தை இயக்கிய அஸ்வின் நாக் இந்த படத்தை இயக்குகிறார்.
இதில், நடிகை சாவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அதற்காக ஓரளவு வெயிட் போட்டு சாவித்ரியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சாவித்ரியின் கணவரான நடிகர் ஜெமினிகணேசன் வேடத்தில் மலையாள நடிகர் துல்கர்சல்மான் நடிக்கிறார். அதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டு வந்த அவர், ஐதராபாத்தில் நடைபெற்று வரும் மகாநதி படப்பிடிப்பில் நேற்று முதல் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.