ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள மக்களுக்கு பிடித்த எவர்கிரீன் படங்களில் பத்து படங்களை மட்டும் பட்டியலிட்டால் அதில் 2௦ வருடங்களுக்கு முன் வெளியான மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். அந்தப்படத்தை இயக்கிய பெருமைக்குரிய இயக்குனர் தான் பத்ரன். அதுமட்டுமல்ல மம்முட்டியை வைத்து 'அய்யர் தி கிரேட்' உட்பட திரையுலக வரலாற்றில் நிலைத்து நிற்கும்படியான படங்களை இயக்கியும் இருக்கிறார் பத்ரன். ஸ்படிகம் தவிர, அங்கிள் பன், ஒலிம்பியன் ஆண்டனி ஆடம் ஆகிய படங்களை மோகன்லாலை வைத்து இயக்கிய இவர், கடைசியாக மோகன்லால் நடித்த 'உடையோன்' என்கிற படத்தை இயக்கினார்.
தற்போது 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் பத்ரன். ஒரு கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்தப்படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மானோ அல்லது பிருத்விராஜோ நடிக்கலாம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது மோகன்லாலை வைத்தே இவர் இயக்க உள்ளார் என்கிற தகவல் உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இயக்குனர் பிரியதர்சன் விசிட் அடித்தபோது அவருடன் இயக்குனர் பத்ரனும் உடன் சென்று மோகன்லாலுடன் உரையாடியது இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.