ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் துருவா படத்தை அடுத்து தனது தந்தை சிரஞ்சீவி நடித்த கைதி எண் 150 படத்தில் ஒரு பாடலில் நடனமாடினார் ராம்சரண் தேஜா. அதையடுத்து ரங்கஸ்தலம் 1985 -என்ற படத்தில் நடித்து வருகிறார். ரொமான்டிக் ஆக்சன் கதையில் தயாராகி வரும் இந்த படத்தை சுகுமார் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 2018 ஜனவரி11-ந்தேதி ரிலீசாகும் இந்த படத்தில் ராம்சரணுடன் சமந்தா, ஜெகபதிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் சண்டை காட்சிகள் தற்போது ராஜமுந்திரியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் மரங்கள் அடர்ந்த பகுதியில் சண்டை காட்சி படமாக்கப்பட்டபோது, ஒரு மரக்கிளை ராம்சரணின் மேல் விழுந்து அவரது கழுத்து, கை பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாம். இருப்பினும், சிறிது நேரம் ஸ்பாட்டிலேயே ஓய்வெடுத்த அவர், தொடர்ந்து அந்த சண்டை காட்சியில் நடித்துள்ளார். அதன்பிறகு மாலை 6 மணிக்கு பிறகு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளார் ராம்சரண்.