டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அக்சய்குமாரும் ஒருவர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி ரீமேக்கான ஹாலிடே இந்தி படத்தில் நடித்த அவர், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும், டாய்லெட்-ஏக் பிரேம் கதா, பேடுமேன் போன்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், இதற்கு முன்பு பெரும்பாலும் ஆக்சன் மற்றும் ரொமாண்டிக் படங்களாக நடித்து வந்த அக்சய்குமார், சமீபகாலமாக சமூக நோக்கமுள்ள கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தற்போது அவர் இந்தியில் நடித்து வரும் டாய் லெட்- ஏக் பிரேம கதா, பேடுமேன் போன்ற படங்கள் சமூக நோக்கமுள்ள கதைகளில்தான் உருவாகி வருகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில் டாய்லெட் ஏக் பிரேம்கதா படம் உருவாகிறது.
இந்தநிலையில் அடுத்தபடியாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ஒரு படத்திலும் அக்சய்குமார் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சினிமாவில் பல பிரபலங்களும் பிரதமரின் வாழ்க்கை கதையில் நடிப்பதற்கு அக்சய்குமாரே பொருத்தமானவர் என்று கருத்து கூறி வருகின்றனர்.
இதுகுறித்து இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா விடுத்துள்ள செய்தியில், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிப்பவர் அக்சய்குமார். அவரிடமும் நல்ல சமூக நோக்கம் உள்ளது. அதன்காரணமாகவே டாய்லெட் -ஏக் பிரேம கதா படத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் அவரது வேடத்தில் நடிக்கவும் அக்சய்குமார் மிக பொருத்தமாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.