ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறவர் மைம்கோபி. அடிப்படையில் மைம் கலைஞரான இவர் பல மைம் கலைஞர்களை தனது பயிற்சி பட்டறையின் மூலம் உருவாக்கி வருகிறார். அதோடு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
அவர் தனது மைம் ஸ்டூடியோ சார்பில் மதுரை ரவுண்ட் டேபிள் கிளப் 99 என்ற அமைப்புடன் இணைந்து பார்வையற்ற 21 மாணவர்களை சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு ரிசார்ட்சில் அவர்களை தங்க வைத்து விருந்து கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தி மீண்டும் விமானத்தில் சென்னை அழைத்து வந்திருக்கிறார்.
இதுகுறித்து மைம்கோபி கூறியதாவது: கடந்த ஆண்டு ஆதரவற்ற குழந்தைகளை கோயம்புத்தூருக்கு அழைத்து சென்றோம், இந்த வருடம் பார்வையற்ற மாணவர்களை அழைத்து சென்றோம். இது அவர்களின் மகிழ்ச்சிக்காக மட்டுமே. அதைத் தவிர வேறொன்றுமில்லை. நான் இவர்களை மகிழ்விப்பதை பார்த்து இன்னும் பலர் இதுபோல செய்ய வருவார்கள் என்பதற்காகவே இதை பகிர்ந்து கொள்கிறேன் என்றார் மைம்கோபி.