வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல தெலுங்கு இயக்குனர் ரவிராஜா பினிசெட்டியின் மகன்தான் ஆதி. மிருகம் படத்தில் அறிமுமான ஆதி அதன் பிறகு ஈரம், அய்யனார், ஆடுபுலி, அரவான் படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு ஒரு வெற்றியை கொடுக்கவில்லை. மகனுக்காக தந்தையே ஒரு படத்தை தயாரித்தார். யாகாவராயினும் நாகாக்க என்ற அந்த படத்தை ஆதியின் சகோதரர் சத்யபிரபாஸ் இயக்கினார். அதுவும் ஆதிக்கு கை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் இப்போது வெளியாகி இருக்கும் மரகத நாணயம் படம். ஆதிக்கு புதிய வெளிச்சத்தை கொடுத்திருக்கிறது. குறிப்பாக மரகத மணி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான இந்தப் படம் அங்கு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றி மகிழ்ச்சியோடு விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறார். இதுபற்றி ஆதி கூறியதாவது:
மரகதநாணயம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருந்தது. மரகதநாணயம் திரைப்படத்தை பொறுத்தவரை கதை தான் ஹீரோ. அடுத்ததாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இப்படத்தை பற்றி மற்ற தகவல்களை முறையாக விரைவில் அறிவிப்போம். இதைதொடர்ந்து தெலுங்கில் நடிகர் ராம் சரணுடன் ரங்கஸ்தனம் 1985 என்ற படத்தில் நடித்து வருகிறேன். பிரமாண்டமான பீரியட் படமாக உருவாகி வரும் இப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். அடுத்ததாக நானியுடன் நின்னு கோரி என்ற படத்தில் நடித்து வருகிறேன்.
வில்லன் கதாபத்திரமோ அல்லது இரண்டு நாயகர்களுடன் நடிப்பதிலோ எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. எந்த ஒரு கதையிலும் என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என்பது தான் எனக்கு முக்கியம். தெலுங்கை விட நான் தமிழ் படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறேன். எனது திருமணம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது, வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்கிறார் ஆதி.