ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை : நடிகர் ரஜினி நடிக்கும், காலா படத்திற்கு, பூந்தமல்லி அருகே, தனியார் பொழுது போக்கு பூங்காவில், பிரம்மாண்டமான, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர், மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில், காலா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஜினி, சமீபத்தில் சென்னை திரும்பினார். அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக, மும்பை செல்ல உள்ளார்.
பூந்தமல்லியை அடுத்த, பழஞ்சூர் பகுதியில், புதியதாக திறந்து மூடப்பட்ட தனியார் பொழுது போக்கு பூங்கா, தற்போது சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடமாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த இடத்தில், காலா படத்திற்கு பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பூந்தமல்லியை அடுத்த, மேப்பூர் பகுதியைச் சேர்ந்த, மைக்கேல் என்ற ராஜேஷ் 31, அப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர், கீழே இருந்த மின் ஒயரை மிதித்தார். அதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட ராஜேஷுக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. சக பணியாளர்கள், ராஜேஷை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.