Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கே.பாலசந்தருக்கு வெண்கல சிலை : வைரமுத்து ஏற்பாடு

22 ஜூன், 2017 - 09:57 IST
எழுத்தின் அளவு:
Vairamuthu-to-lay-Brozen-Statue-for-K.Balachander

இயக்குனர் கே.பாலசந்தருக்கு, நட்பின் அடையாளமாக, கவிஞர் வைரமுத்து, வெண்கல சிலை அமைக்க உள்ளார். தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர் கே.பாலசந்தர். நடிகர் கமல், ரஜினி போன்ற பிரபலங்களை அறிமுகம் செய்த அவர், தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர்.
அவரின் பிறந்த ஊர், திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை ஒட்டிய நல்லமாங்குடி. தற்போது, பாலசந்தரின் வீடு, ஒரு பள்ளிக்கூடமாக இருக்கிறது. தொழில் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் பாலசந்தரும், கவிஞர் வைரமுத்துவும் நெருங்கி பழகியவர்கள். அந்த நட்பின் அடையாளமாக, பாலசந்தர் ஊரில், அவருக்கு, வைரமுத்து சிலை அமைக்கிறார். அதன்படி, பாலசந்தரின் பிறந்த நாளான, ஜூலை, 9ல், நல்லமாங்குடியில் உள்ள பள்ளி வளாகத்தில் சிலை நிறுவப்படுகிறது.
வெண்கலத்தில் செய்யப்பட்ட பாலசந்தரின் மார்பளவு சிலையை, அவரின் மனைவி ராஜம் திறந்து வைக்கிறார்.
விழாவில், நடிகர் கமல், இயக்குனர்கள் மணிரத்னம், வசந்த், எஸ்.சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்று, பாலசந்தருக்கு புகழஞ்சலி செலுத்துகின்றனர். பாலசந்தர் குடும்பத்தினர், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
சிலை திறப்பு குறித்து, வைரமுத்து கூறியதாவது:
திரையுலகில், என்னால் மறக்க முடியாத, ஒரு பேராளுமை இயக்குனர் கே.பாலசந்தர். ஒரு மகனைப் போல், என்னை அவர் நேசித்தார். ஒரு தந்தையைப் போல், அவரை நான் நேசித்தேன். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர். சமூகத்தின் இருட்டின் மீது வெளிச்சம் பாய்ச்சி, ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். தமிழ் சினிமாவுக்கு, இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப் போலவே, அவரும் மறக்கப்படக் கூடாதவர்.
அவர் படங்களை, வெற்றி படம், தோல்வி படம் என, தரம் பிரிக்க முடியாது. புரிந்து கொள்ளப்பட்டவை, புரிந்து கொள்ளப்படாதவை என்று மட்டுமே, இனம் பிரிக்கலாம். அவருக்கு சிலை எடுப்பது என்பது, அவருக்கு, நான் செலுத்தும் நன்றி மட்டுமல்ல; முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாசாரமாகும். இந்த பணியை, என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜூலை, 9, மாலை, 5:00 மணிக்கு, நல்லமாங்குடி குரு நர்சரி மற்றும் துவக்கப் பள்ளி வளாகத்தில், சிலை திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in