பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இயக்குனர் கே.பாலசந்தருக்கு, நட்பின் அடையாளமாக, கவிஞர் வைரமுத்து, வெண்கல சிலை அமைக்க உள்ளார். தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர் கே.பாலசந்தர். நடிகர் கமல், ரஜினி போன்ற பிரபலங்களை அறிமுகம் செய்த அவர், தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர்.
அவரின் பிறந்த ஊர், திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை ஒட்டிய நல்லமாங்குடி. தற்போது, பாலசந்தரின் வீடு, ஒரு பள்ளிக்கூடமாக இருக்கிறது. தொழில் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் பாலசந்தரும், கவிஞர் வைரமுத்துவும் நெருங்கி பழகியவர்கள். அந்த நட்பின் அடையாளமாக, பாலசந்தர் ஊரில், அவருக்கு, வைரமுத்து சிலை அமைக்கிறார். அதன்படி, பாலசந்தரின் பிறந்த நாளான, ஜூலை, 9ல், நல்லமாங்குடியில் உள்ள பள்ளி வளாகத்தில் சிலை நிறுவப்படுகிறது.
வெண்கலத்தில் செய்யப்பட்ட பாலசந்தரின் மார்பளவு சிலையை, அவரின் மனைவி ராஜம் திறந்து வைக்கிறார்.
விழாவில், நடிகர் கமல், இயக்குனர்கள் மணிரத்னம், வசந்த், எஸ்.சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்று, பாலசந்தருக்கு புகழஞ்சலி செலுத்துகின்றனர். பாலசந்தர் குடும்பத்தினர், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
சிலை திறப்பு குறித்து, வைரமுத்து கூறியதாவது:
திரையுலகில், என்னால் மறக்க முடியாத, ஒரு பேராளுமை இயக்குனர் கே.பாலசந்தர். ஒரு மகனைப் போல், என்னை அவர் நேசித்தார். ஒரு தந்தையைப் போல், அவரை நான் நேசித்தேன். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர். சமூகத்தின் இருட்டின் மீது வெளிச்சம் பாய்ச்சி, ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். தமிழ் சினிமாவுக்கு, இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப் போலவே, அவரும் மறக்கப்படக் கூடாதவர்.
அவர் படங்களை, வெற்றி படம், தோல்வி படம் என, தரம் பிரிக்க முடியாது. புரிந்து கொள்ளப்பட்டவை, புரிந்து கொள்ளப்படாதவை என்று மட்டுமே, இனம் பிரிக்கலாம். அவருக்கு சிலை எடுப்பது என்பது, அவருக்கு, நான் செலுத்தும் நன்றி மட்டுமல்ல; முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாசாரமாகும். இந்த பணியை, என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜூலை, 9, மாலை, 5:00 மணிக்கு, நல்லமாங்குடி குரு நர்சரி மற்றும் துவக்கப் பள்ளி வளாகத்தில், சிலை திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.