தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படம் வந்த போது அந்தப் படத்தின் நாயகியான ஸ்ரேயாவும் பரபரப்பாகப் பேசப்பட்டார். அவருடைய பாந்தமான அழகும், அசத்தலான நடன அசைவுகளும் ரசிகர்களைக் கட்டிப் போட்டது. தமிழ் சினிமாவில் அடுத்த சிம்ரன், ஸ்ரேயாதான் என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால், ஸ்ரேயா செய்த ஒரே ஒரு தவறு அவரை தமிழ் சினிமாவை விட்டே வெளியேற்றிவிட்டது.
வடிவேலு ஜோடியாக 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தில் நடித்ததால் மற்ற ஹீரோக்கள் மறைமுகமாக ஸ்ரேயாவை புறக்கணிக்க ஆரம்பித்தனர். ஒரு காமெடி நடிகருடன் ஜோடியாக நடித்தவருடன் நாம் நடிப்பதா என்பதே அதற்குக் காரணமாக அமைந்தது.
விஜய்யுடன் 'அழகிய தமிழ்மகன்', விஷாலுடன் 'தோரணை', விக்ரமுடன் 'கந்தசாமி', தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் 'சிக்குபுக்கு, ஜீவாவுடன் 'ரௌத்திரம்' என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் 2011க்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் இருந்தே விலக வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
மூன்று வருடங்களுக்கு முன்பு கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட 'சந்திரா' படத்தின் கிளாமரான புகைப்படங்கள் மீண்டும் ஸ்ரேயாவைப் பற்றிப் பேச வைத்தன. ஆனால், அந்தப் படம் தமிழில் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா கதாநாயகியாக நடித்துள்ள 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. அடுத்து அரவிந்த்சாமி ஜோடியாக நடிக்க 'நரகாசூரன்' படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கிலும் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். 'அஅஅ' படம் வெற்றி பெற்றால் ஸ்ரேயா மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகலாம்.