பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மலையாள நடிகர்களை பொறுத்தவரை தமிழுக்கு வருகிறார்கள் என்றால், அது நம்ம ஊர் இயக்குனர்கள் அவர்களின் திறமையை பார்த்து வியந்து தமிழ்ப்படங்களில் கதாநாயகர்களாகவோ அல்லது முக்கிய வேடங்களிலோ நடிக்க அழைப்பதால் தான். பிருத்விராஜ், நிவின்பாலி, துல்கர் சல்மான் இப்போது பஹத் பாசில் போன்றவர்கள் எல்லாம் அப்படி வந்தவர்கள் தான். மம்முட்டியின் தம்பி மகன் மக்பூல் சல்மானும் கூட இப்போது தமிழில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த வரிசையில் அடுத்ததாக இடம்பிடித்துள்ள மலையாள நடிகர் டொவினோ தாமஸ்.
கடந்த வருடம் வரை வளரும் நடிகர்கள் பட்டியலில் இருந்த இவர் இந்த வருடம் வெளியான 'ஒரு மெக்சிகன் அபராதா' மற்றும் 'கோதா' ஆகிய படங்களின் மூலம் முக்கியமான இடத்திற்கு நகர்ந்துள்ளார். தனுஷ் மலையாளத்தில் தற்போது தயாரித்துவரும் 'தரங்கம்' படத்தில் இவர்தான் ஹீரோ.. அதுமட்டுமல்ல, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கிவரும் படத்தில் நடிப்பதன் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்துள்ளார் டொவினோ. பிருத்விராஜ், துல்கர் சல்மானை போல தமிழில் ஒரு நல்ல இடத்தை பெறவேண்டும் என்பதற்காக தானே, தமிழில் டப்பிங்கும் பேசி ஆச்சர்யப்பட வைத்துள்ளாராம். கோவையில் நான்கு வருடம் கல்லூரியில் படித்ததும் சென்னையில் ஒரு வருடம் வேலைபார்த்த அனுபவமும் இவருக்கு தமிழில் பேசுவதை எளிதாக்கி விட்டதாம்.